புதுச்சேரி:

போக்குவரத்து காவலர்கள் பணி நிமித்தம் காரணமாக மன அழுத்தத்துக்கு உள்ளாவதால், அதில் இருந்து விடுபடும் நோக்கில், வார இறுதி நாட்களில், புதிய சீருடையாக  டி-சர்ட் வழங்கி அசத்தி உள்ளது புதுச்சேரி காவல்துறை.

சாலப்போக்குவரத்தை சரி செய்து, வாகனங்கள் சிரமமின்றி செல்ல, வெயில் மழை பாராது பணியாற்றி வருபவர்கள் போக்குவரத்துக் காவலர்கள். இவர்கள் நின்று கொண்டே, வாகன ஒலிகளுக்கு இடையே பணியாற்றி வருவதால், மனஅழுத்தத்துக்கு ஆளாவதாக கூறப்படுகிறது. மேலும், அவர்கள் அணியும் அடர்த்தியான உடைகளும் அவர்களுக்கு சிரமங்களை கொடுப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், போக்குவரத்துக் காவலர்களின் மனஅழுத்தத்தை போக்கும் வகையில், போக்குவரத்து காவலர்களுக்கு வார இறுதி நாட்களில் டி-சர்ட் அணிந்து பணிபுரியும் வகையில் புதிய சீருடையை வழங்கி உள்ளது புதுச்சேரி மாநில போக்குவரத்துத் துறை.

இந்த புதிய டி-சர்ட்டுகள் போக்குவரத்து காவலர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியை அளிக்கும் என அம்மாநில காவல் துறை கூறி உள்ளது.