விராட் கோலியும் நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த சிலவருடங்களாகக் காதலித்து வருகிறார்கள். இவர்களின் நிச்சயதார்த்தம் ஜனவரி 1ம் தேதி உத்தரகாண்ட் மாநிலம் நரேந்திர நகரில் உள்ள ஆனந்தா ஓட்டலில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
விராட் கோலிக்கும் அனுஷ்கா சர்மாவுக்கும் நிச்சயதார்த்தம் நடக்கவுள்ளதாக வெளிவந்த செய்தியை மறுத்துள்ளார் விராட் கோலி.
விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில், “எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை. நாங்கள் நிச்சயதார்த்தம் செய்துகொண்டால் அதை மறைக்க மாட்டோம்.” என கூறியுள்ளார்.