டில்லி

ராயல் சொசைட்டியின் தலைவரும் நோபல் பரிசு பெற்றவருமான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார்

நோபல் பரிசு பெற்றவரும் ராயல் சொசைட்டியின் தலைவருமான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மூலக்கூறு உயிரியலுக்கான ஆய்வகத்தில் உள்ளார், ஆனால் வாரத்தின் ஒரு பகுதியை லண்டனில் உள்ள ராயல் சொசைட்டியின் தலைமையகத்தில் செலவிடுகிறார்.  சமீபத்தில் அவர் செய்தி ஊடகம் ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா குறித்த தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

அந்த பேட்டியில்,“நான் வெளிநாட்டில் வாழ்ந்தாலும் நான் இந்தியாவை மிகவும் விரும்புகிறேன். இந்தியா ஒரு சிறந்த சகிப்புத்தன்மையுள்ள இலட்சியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக நான் எப்போதும் நினைக்கிறேன், இந்தியா வெற்றிபெற வேண்டும் என்றும் நான் விரும்புகிறேன். ”இந்திய இளைஞர்கள் மிகவும் ஆர்வமுள்ளவர்கள், கடினமான சூழ்நிலைகளில் ஏதாவது செய்ய முயல்கிறார்கள்,

எந்தவொரு மதத்திற்கும் சாதகமாக இல்லாத ஒரு மதச்சார்பற்ற ஜனநாயகமாக இந்தியா முடிவு செய்தது. அதுதான் இந்தியாவின் அடிப்படை, அதனால்தான் இந்தியாவில் 200 மில்லியன் முஸ்லிம்கள் இருக்கிறார்கள், அதேசமயம் பாகிஸ்தானில் முஸ்லிமல்லாதவர்கள் அதிக அளவில் இல்லை.  பாகிஸ்தானில் ஒரு சதவீதம் மட்டுமே முஸ்லிம் அல்லாதவர்கள்.  நாம் பாகிஸ்தானியர் அல்ல.

நாம் மதச்சார்பற்றவர்களாக இருப்பதால்  வேறுபட்டவர்களாக உள்ளோம். இந்தியர்கள் இடையே, இது ஒரு சிறந்த அம்சம்   இந்தியாவில் எல்லா மதத்தவரும் பொறுத்துக் கொள்ளப்படுகிறார்கள். அப்படி இருக்கக் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா போன்ற ஒரு தவறான நடவடிக்கை தேவையற்றது” என வெங்கடராமன் கூறி உள்ளார்.