மேட்டூர்

கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்து 7563 கன அடியாக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆயினும் அணைக்கு வரும் நீர்வரத்தை விட குறைந்த அளவிலேயே அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போதைய  நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,498 கன அடியில் இருந்து 7,563 கன அடியாக உயர்ந்துள்ளது. தற்போது அணையில் 20.79 டி.எம்.சி. அளவு தண்ணீர் இருப்பு உள்ளது.

மேலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 54.55 அடியில் இருந்து 54.85 அடியாக உயர்ந்துள்ள போதும் அணையில் இருந்து குடிநீர்த் தேவைக்காகத் திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 500 கன அடியில் இருந்து 250 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.