புதுடெல்லி:
காராஷ்டிரா, ஹரியானா, பீகார், ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது.

பீகாரில் – மொகாமா , கோபால்கஞ்ச் தொகுதிகளுக்கும் ., மகாராஷ்டிராவின் அந்தேரி கிழக்கு , அரியானாவின் ஆதம்பூர் , தெலுங்கானாவின் முனுகோட் , உத்தரபிரதேசத்தின் கோலா கோக்ரநாத் மற்றும் ஒடிசாவின் தாம்நகர் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

பீகாரின் கோபால்கஞ்ச்தொகுதி எம்எல்எ சுபாஷ்சிங் கடந்த ஆகஸ்டு மாதம் காலமானார் அதுபோல பீகாரில் உள்ள மொகாமா தொகுதி எம்எல்ஏ, அனந்த்குமார்சிங் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதனால் அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதே போல அந்தேரி கிழக்கு , கோலா கோகர்நாத் , தாம்நகரில் எம்.எல்.ஏக்கள் காலமானதால் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

இந்நிலையில், 6 மாநிலங்களில் உள்ள 7 தொகுதிகளில் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

நவம்பர் 6-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட்டுள்ளது.