சென்னை;

டன் சொல்லி ஓட்டு கேட்ட வரலாறு எங்கும் நடந்தது இல்லை என ஆர்.கே.நகரில் வெற்றி பெற்ற டிடிவி தினகரனை கலாய்த்துள்ளார்  அமைச்சர் ஜெயக்குமார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்,  மக்களை நம்பியே ஆட்சியும் ஆட்சியாளர்களும் உள்ளோமே தவிர பணத்தை நம்பியில்லை. 10000 தருவதாக கூறி கடன் பெற்று வெற்றி பெற்ற தினகரனை ஆர்.கே.நகர் மக்கள் தேடிவருகின்றனர் என அமைச்சர் ஜெயக்குமார் நக்கலடித்தார்.

அதைத்தொடர்ந்து, செய்தியாளர்கள்  நடிகர் கமல் வார இதழ் தொடர் ஒன்றில் எழுதியுள்ளது கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர்,  கமலுக்கு தைரியம் இருந்தால் தினகரனை நேரடியாக விமர்சனம் செய்வது தானே என்றார்.  அதிமுக அரசை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கமல் விமர்சித்து வருகிறார். அவருக்கு தைரியம் இருந்தால் திமுகவையோ தினகரனையோ விமர்சிக்கட்டும் என  கூறினார்.

ஆனந்த விகடன் வாரத இதழில் கமல் தொடர் எழுதி வருகிறார். இந்த வாரத் தொடரில் ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் வெற்றி குறித்து எழுதியிருக்கிறார். அதில்,   “ஆளும் கட்சி தரப்பில் வாக்காளர்கள் ஒவ்வொரு வாக்குக்கும் ரூ.6,000 தரப்பட்டது. முதல்வர் ஆரம்பித்து அமைச்சர் வரை ஒவ்வொருவரும் கச்சிதமாக பட்டுவாடா செய்தது அம்பலமாகியுள்ளது. சுயமாக வளர்ந்த சுயேட்சை ரூ.20,000 தந்து ஒவ்வொரு ஓட்டுக்கும் விலை நிர்ணயித்தார். அதிக விலை நிர்ணயித்த சுயேட்சைக்கு பொத்தானை அழுத்தி விட்டார்கள் வாக்காளர்கள்” என்று வேதனையுடன் பதிவிட்டுள்ளார் கமல்.

மேலும், ஆர்.கே.நகர் வாக்காளர்கள் 20 ரூபாய் டோக்கனுக்கு விலைபோய்விட்டனர். 20 ரூபாய் டோக்கனுக்கு விலைபோனது பிச்சை எடுப்பது போன்றது. திருடனிடம் பிச்சை எடுப்பது போன்ற ஒரு கேவலம் எங்கேயாவது உண்டா?” என்று  எழுதியுள்ளார்.