கொரோனா அச்சுறுத்தலால் பிரபலங்கள் அனைவருமே சமூக வலைதளங்கள் மூலமாகத்தான் தங்களுடைய கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
அந்த வரிசையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் அஸ்வின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேட்டி எடுத்து வருகிறார்.
தற்போது நடிகர் விஷ்ணு விஷாலைப் பேட்டி எடுத்துள்ளார்.
இந்தப் பேட்டியில் சிம்புவைப் புகழ்ந்துள்ளார் விஷ்ணு விஷால்.
‘ராட்சசன்’ படம் பண்ணும்போது சிம்புவைச் சந்தித்தேன். அந்தச் சமயத்தில் அவருடன் சுமார் 6 மணி நேரம் செலவழிக்க முடிந்தது. அந்தச் சமயத்தில் பல விஷயங்களை எனக்குக் கற்றுக் கொடுத்தார். அடுத்ததாக படப்பிடிப்புக்குச் சென்றவுடன் அவர் சொல்லிக் கொடுத்ததை எல்லாம் செய்து பார்த்தேன். அப்போது வியந்துவிட்டேன்.
“படப்பிடிப்புத் தளத்தில் லைட்டிங் பண்ணுவார்கள். அப்போது நாம் அதற்கு நேராகத் திரும்பும்போது லைட்டிங் மேலேயே விழும்.அன்று முதல் படப்பிடிப்புக்குச் சென்றவுடன் எங்கெல்லாம் லைட்டிங் விழுகிறது என்பதெல்லாம் பார்த்து உள்வாங்கி நடிக்கத் தொடங்கினேன். அதற்கு முன்பு வரை லைட்டிங்கிற்கு எல்லாம் பெரிதாக முக்கியத்துவம் கொடுத்ததில்லை என தெரிவித்துள்ளார் .