உங்கள் ராசிக்குரிய பெருமாள் மந்திரம் – பகுதி 2

ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு திருமால் மந்திரம் அமையப் பெற்றிருக்கிறது. இது பலரும் அறியாத விஷயமாக இருந்து வருகிறது. அந்தந்த ராசிக்காரர்கள், அந்தந்த மந்திரத்தை தினமும் உச்சரித்து வந்தால், திருமாலின் ஆசி பரிபூரணமாக கிட்டும். அவரின் அனுகிரகம் கிடைத்தாலே நமக்கு செல்வ வளம் அள்ள அள்ள குறையாமல் பெருகிக் கொண்டே இருக்கும் அல்லவா?

செல்வத்திற்கு அதிபதியாக இருக்கும் மகா லக்ஷ்மியை மனைவியாக கொண்டவராய் விளங்குவதால் இந்த மந்திரம் உச்சரிப்பவர்களுக்கு சகல செல்வ சம்பத்துகளும் விரைவில் உண்டாகும் என்பது ஐதீகம். இதில் குறிப்பாக எந்தெந்த ராசிக்காரர்கள்? எந்த மந்திரத்தை உச்சரித்து பயனடையலாம்? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்!!!

இன்று இரண்டாம் மூன்று ராசிகளுக்கான மந்திரங்கள்

கடக ராசி:

 பொருளாதார ரீதியான பிரச்சனைகள் இருந்தாலும், பண நெருக்கடி காரணமாகக் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருந்தாலும் இந்த மந்திரத்தை தினமும் உச்சரித்து வருவதன் மூலம் பயனடையலாம்.இதோ உங்களுக்கான மந்திரம்:                                                         

ஓம் கோவிந்தாய நம:

 

சிம்ம ராசி:

மன பயம் நீங்கவும், வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரவும், தொழில் விருத்தி அடையவும் இந்த மந்திரத்தைத் தினமும் உச்சரித்து பயன் பெறலாம்.இதோ உங்களுக்கான மந்திரம்:                                                        

ஓம் விஷ்ணவே நம:

கன்னி ராசி:

மிகவும் பயனுள்ள மந்திரமாக இந்த மந்திரம் இருக்கும். குடும்பத்தில் இருக்கும் எந்த விதமான பிரச்சனைகளுக்கும் தினமும் இந்த மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் நிவாரணம் கிடைக்கும். இதோ உங்களுக்கான மந்திரம்:.                                  

ஓம் மதுசூதனாய நம: