உங்கள் ராசிக்குரிய பெருமாள் மந்திரம் – பகுதி 1

ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு திருமால் மந்திரம் அமையப் பெற்றிருக்கிறது. இது பலரும் அறியாத விஷயமாக இருந்து வருகிறது. அந்தந்த ராசிக்காரர்கள், அந்தந்த மந்திரத்தைத் தினமும் உச்சரித்து வந்தால், திருமாலின் ஆசி பரிபூரணமாகக் கிட்டும். அவரின் அனுக்கிரகம் கிடைத்தாலே நமக்கு செல்வ வளம் அள்ள அள்ளக் குறையாமல் பெருகிக் கொண்டே இருக்கும் அல்லவா?

செல்வத்திற்கு அதிபதியாக இருக்கும் மகா லக்ஷ்மியை மனைவியாகக் கொண்டவராய் விளங்குவதால் இந்த மந்திரம் உச்சரிப்பவர்களுக்குச் சகல செல்வ சம்பத்துகளும் விரைவில் உண்டாகும் என்பது ஐதீகம். இதில் குறிப்பாக எந்தெந்த ராசிக்காரர்கள்? எந்த மந்திரத்தை உச்சரித்துப் பயனடையலாம்? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்!!!

இதோ முதல் மூன்று ராசிகளுக்கான மந்திரங்கள்

~~~~~~~~~~

 மேஷ ராசி:

 செல்வ வளம் பெருகவும், தொழில் மற்றும் வியாபாரம் செழித்து ஓங்கவும், திருமாலின் குறிப்பிட்ட இந்த மந்திரத்தை தினமும் உச்சரித்து வருவதால் பயனடையலாம்.

இதோ உங்களுக்கான மந்திரம்:                

ஓம் கேசவாய நம:

ரிஷப ராசி:

 வீட்டில் இருக்கும் வறுமை ஒழியவும், செல்வ யோகம் கிட்டவும், வேலை இல்லாதவர்களுக்கு மனதிற்குப் பிடித்த வேலை அமையவும் வேண்டி திருமாலின் இந்த மந்திரத்தைத் தினமும் உச்சரித்துப் பயனடையலாம்.

இதோ உங்களுக்கான மந்திரம்:                       

 ஓம் நாராயணாய நம:

மிதுன ராசி:

 வாழ்கையில் இருக்கும் கஷ்டங்கள் யாவும் குறையவும், செல்வ வளம் பெருகவும், நீடித்த வருமானம் கிடைக்கப் பெறவும் இந்த மந்திரத்தைத் தினமும் உச்சரித்துப் பயனடையலாம்.

இதோ உங்களுக்கான மந்திரம்:               

ஓம் மாதவாய நம:

அடுத்த 3 ராசிகளை அடுத்த பகுதியில் காண்போம்