விசாகப்பட்டிணம்:

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் படகுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அதில் இன்று ஒரு மீன்பிடி படகு திடீரென தீ பிடித்து எரிந்தது.

உடன் அருகில் இருந்தவர்கள் போராடி தீயை அனைத்தனர். எனினும்படகு முற்றிலும் தீயில் கருகி நாசமானது. பழுது நீக்குவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த படகு எரிந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.