டெல்லி: கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு,  இந்தியாவுக்கான ரஷ்ய தூதரகத்தில், விசா வழங்கும் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.

ஓராண்டு கடந்தும் கொரோனா வைரஸ் உலகையே இன்னமும் ஆட்டி படைத்து வருகிறது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வைரஸை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

நாடு முழுவதும் 4 நாட்களாக, தினசரி கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை கடந்துள்ளது. இந் நிலையில், உயிரிழப்போர் எண்ணிக்கையும், ஆயிரத்தை கடந்து அதிர்ச்சியை தருகிறது. அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு,  இந்தியாவுக்கான ரஷ்ய தூதரகத்தில், விசா வழங்கும் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.