விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா தம்பதிக்கு இரண்டாவது குழந்தை பிறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மும்பையில் உள்ள ஒரு மகப்பேறு கிளினிக்கில் இந்த தம்பதியினர் காணப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியான நிலையில் அனுஷ்கா சர்மா மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

2017ல் திருமணம் செய்துகொண்ட விராட் கோலி – அனுஷ்கா சர்மா தம்பதிக்கு 2021 ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது.

அப்போது இந்திய அணியுடன் ஆஸ்திரேலியா பயணம் சென்ற கோலி தந்தையாக தனது கடமையைச் செய்ய விடுமுறை எடுத்துக் கொண்டு இந்தியா திரும்பினார்.

இந்த நிலையில் உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் தொடங்க உள்ள நிலையில் விராட் கோலி மீண்டும் தந்தையாக உள்ளதாக கூறப்படுவதை அடுத்து அவர் இந்த தொடரில் விடுப்பு எடுப்பாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இருந்தபோதும், அனுஷ்கா சர்மா தற்போது இரண்டாவது முறையாக அம்மாவாக உள்ளதாக வெளியாகி உள்ள தகவலை அவர்கள் இருவரும் இதுவரை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.