பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் உலகம் முழுவதும் வரும் 13 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் தியேட்டர்கள் திறக்கப்படாததால், அங்கு மாஸ்டர் திரைப்படத்தை திரையிட முடியாத நிலை இருந்தது.

இந்நிலையில் கேரள மாநிலத்தில் வரும் ஐந்தாம் தேதி தியேட்டர்களை திறக்க மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

சமூக இடைவெளியை கடை பிடிக்கும் வகையில் பாதி இருக்கைகளை மட்டுமே நிரப்ப வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிபந்தனையை தியேட்டர் உரிமையாளர்கள் ஏற்க மறுத்து விட்டனர்.

பாதி இருக்கைகளை மட்டும் நிரப்பினால் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என தெரிவித்துள்ள கேரள தியேட்டர் உரிமையாளர்கள், 5 ஆம் தேதி தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுடன் கலந்து ஆலோசிக்க இருப்பதாக கூறியுள்ளனர்.

கேரள மாநிலத்தில் மாஸ்டர் திரைப்படம் நல்ல விலைக்கு விற்பனை ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

– பா. பாரதி