வசந்தகுமார் எம்.பி. (70) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 28-ம் தேதி காலமானார்.

வசந்தகுமாரின் மனைவி தமிழ்செல்வி, மகள் தங்கமலர், மகன்கள் விஜய் வசந்த், வினோத்குமார் ஆகியோருக்கு பலரும் ஆறுதல் கூறி வருகிறார்கள். இதில் விஜய் வசந்த் நடிகராக இருக்கிறார்.

அப்பா உடல் அடக்கம் முடிந்தவுடன், விஜய் வசந்த் தனது ட்விட்டர் பதிவில் :-

“50 ஆண்டுகளுக்கு முன்பு, அவருக்கு 20 வயது இருக்கும்போது, கனவுகளை மட்டுமே சுமந்து கொண்டு என் அப்பா சென்னை வந்தார். 50 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது கனவு நனவானதும் அவர் தனது கிராமத்துக்கு ஓய்வெடுக்க ஒரு முழுமையான மனிதனாகத் திரும்பிச் சென்றுள்ளார். உங்கள் பிரார்த்தனைகளுக்கும், அஞ்சலிகளுக்கும், இரங்கல்களுக்கும் நன்றி.” என விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.