சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விக்னேஷ் சிவன் – நயன்தாரா சந்தித்து பேசினார்.

நீண்ட ஆண்டுகளாகக் காதலித்து வந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி திருமணம் வருகிற 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இந்த திருமண நிகழ்ச்சியை இயக்குனர் கவுதம் மேனன் இயக்க பிரபல ஓடிடி நிறுவனம் ஒளிபரப்ப உள்ளது. திருமணத்திற்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில் இன்று (ஜூன் 4) நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து தங்களின் திருமண அழைப்பிதழ் கொடுத்தனர். அப்போது நடிகரும், சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார்.