டில்லி

தேசிய மாநிலக் கட்சிகளிடம் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து கருத்துக் கேட்க உள்ளதாக உயர்மட்டக்குழு அறிவித்துள்ளது.

கடந்த 1 ஆம் தேதி அன்று மத்திய அரசு ஒரே நாடு, ஒரே தேர்தல்’ முறையின் சாத்தியக்கூறுகளை ஆராய ஒரு குழுவை அமைத்தது. குழுவில் உள்துறை மந்திரி அமித்ஷா ,மக்களவை முன்னாள் பொதுச் செயலாளர் சுபாஷ் காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் முன்னாள் தலைவர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் நியமிக்கப்பட்டு இருந்தனர்.

இன்று இந்தக் குழுவின் முதல் கூட்டம் ராம் நாத் கோவிந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டம் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது. அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகளிடம் ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாகக் கருத்துக்கள் கேட்க இந்த கூட்டத்தில், முடிவு செய்யப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்று அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் தங்களுடைய கருத்துக்களைத் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியச் சட்ட ஆணையத்திடமும் கருத்துக்கள் கேட்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.