மிழகத்தை சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி  அப்துல் கலாமின் இரண்டாவது நினைவு நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் ராமேஸ்வரம் பகுதியில் உள்ள பேக்கரும்பு என்ற பகுதியில், மறைந்த ஏவுகணை நாயகனுக்கு மணி மண்டபம் கட்டப்பட்டு இன்று பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த வேளையில்  ஏவுகணை நாயகன்  அப்துல் கலாம் குறித்து அறிந்து கொள்ளவேண்டிய அரிய தகவல்கள் சிலவற்றை வாசர்களுக்கு தொகுத்து வழங்குகிறது பத்திரிகை.காம்.

சிறுவர்களுக்கு,  எதிர்கால தலைமுறைக்கு வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த செல்போனில் நூலகம் அமைக்கும் தொழில்நுட்பத்தை புகுத்த வேண்டும் என்ற கலாம்,

இளைஞர்களுக்கு, அழகைப்பற்றி கனவு காணாதீர்கள், அது உங்களின் கடமையை பாழாக்கிவிடும்- கடமையைப்பற்றி கனவு காணுங்கள் அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும் என்று வாழ்க்கை சித்தாந்தையும் கூறி உள்ளார்.

தாய்மொழியான தமிழ் வழியில் கல்வி பயின்று, உலகமே வியக்கும் வகையில் அறிவியல் துறையில் உலக சாதனைகள் செய்தவர் அப்துல் கலாம்.

இந்திய ஜனாதிபதிகளில் மிக, மிக எளிமையாகவும், சைவ உணவுகள் மட்டுமே சாப்பிட்டு வாழ்ந்த ஒரே ஜனாதிபதி கலாம்தான்.

மாணவர்களே கனவு காணுங்கள்’ என்று சொல்லி மாணவர்கள் மத்தியில் புரட்சியை ஏற்படுத்தியவர்.

பட்டி தொட்டிகளில் படிக்கும் மாணவ பை மாணவிகளிடம் கூட நாட்டின் மீது தேசப்பற்றறை ஊட்டியவர் கலாம்.

பெருந்தலைவர் காமராஜர் நாட்டு மக்களுக்கு சேவை செய்யவேண்டியதிருப்பதால் திருமணம் செய்து கொள்ள மறுத்தார்,  அவரது வழியை பின்பற்றி,  தனது கனவான அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகளில் தன்னால் முழுமையாக ஈடுபட முடியாது என்று கருதி திருமணம் செய்ய மறுத்தவர் கலாம்.

ஜனாதிபதியாக இருப்பவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற மரபுகளை உடைந்தெறிந்து,  பதவியேற்ற முதல் நாளே சகஜமாக பழகியவர் அப்துல் கலாம்.

 அப்துல் கலாம் நிறைய கவிதைகள் எழுதியுள்ளார். அந்த கவிதைகளின் வரிகள் ஒவ்வொன்றும் வாழ்க்கைக்கு வழிகாட்டும் வார்த்தைகளாக உள்ளன.

அப்துல் கலாம் தன்னடகத்தின் உச்சமாக திகழ்ந்தவர். அவரைப் போன்று பணிவான மனிதர்களை காண்பது அரிது என்று உலக தலைவர்களே வியந்துள்ளனர்.

நான் என்ற அகந்தை எண்ணம் அவரிடம் துளி அளவு கூட இருந்ததில்லை.

சிறு வயது முதல் வாழ்நாளின் இறுதி வரை அமைதியானவர், அன்பானவர் என்ற பாதையில் இருந்து அவர் விலகாமலே இருந்தார்.

ஒரு தடவை அவர் வெளிநாடு சென்றிருந்த போது விமான நிலைய அதிகாரிகள் அவர் அணிந்திருந்த கால் ஷூவை அகற்றி சோதித்த போது, சிரித்துக் கொண்டே முழு ஒத்துழைப்புக் கொடுத்தார்.

ஜனாதிபதியாக இருந்த போது ஒரு நாள் டெல்லி ஜும்மா மசூதிக்கு தொழ சென்ற அவர் இடம் நெருக்கடி காரணமாக கடைசி வரிசையில் கூட்டத்தோடு கூட்டமாக நின்று இறைவனை தொழுதது குறிப்பிடத்தக்கது.

எந்த அளவுக்கு அவர் தன்னடக்கம் கொண்டிருந்தாரோ, அதே அளவுக்கு தன்னம்பிக்கையும் கொண்டிருந்தார்.

‘நீ முயன்றால் நட்சத்திரங்களையும் பறிக்கலாம்’ என்று அடிக்கடி மாணவர்களுக்கு அறிவுரை கூறுவார்.

அப்துல் கலாமிடம் ஒரு தடவை ஒரு மாணவி ‘நல்ல நாள், கெட்ட நாள் எது?’ என்று கேட்டாள். அதற்கு அப்துல் கலாம், ’பூமி மீது சூரிய ஒளிபட்டால் அது பகல். படா விட்டால் இரவு, இதில் நல்லது கெட்டது என்று எதுவும் இல்லை’ என்றார்.

ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் கூட, அந்த மாத சம்பளத்தை வாங்கி அதில் ஒரு பகுதியை தன் குடும்பத்துக்கு அனுப்புவதை அப்துல் கலாம் வழக்கத்தில் வைத்திருந்தார்.

அப்துல் கலாம் எந்த ஒரு காலக்கட்டத்திலும், எந்த ஒரு பதவியையும் எதிர்பார்க்காதவர். ஜனாதிபதி வேட்பாளராக அவர் பெயர் அறிவிக்கப்படுவதற்கு சற்று முன்பு வரை அவர் தன் விரிவுரையாளர் பணியில் சுறுசுறுப்பாக இருந்தார்.

அப்துல் கலாம் இளம் வயதில் விமானி ஆக வேண்டும் என்று ஆசைப்பாட்டார். அது கிடைக்காததால் பாதுகாப்புத்துறை தொழில் நுட்ப படிப்பைத் தேர்வு செய்தார்.

னைத்து வளங்களும் நிறைந்த இந்தியா 2020பம் ஆண்டில் உலகின் வளர்ந்த 5 நாடுகளில் ஒன்றாக திகழும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி இந்தியர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தினார்.

திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் 1954பம் ஆண்டு பிஎஸ்சி படித்த அப்துல் கலாம் அந்த பட்டத்தை வாங்காமல் விட்டு விட்டார். 48 ஆண்டுகளுக்கு பிறகு அதை கேட்டுப் பெற்றார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த கனகசுந்தரம் என்ற சன்னியாசியிடம் அப்துல் கலாம் ஆங்கிலம் கற்றுக் கொண்டார்.

ராமேசுவரம் மாவட்ட கல்விக் கழக பள்ளி அறிவியல் ஆசிரியர் சிதம்பரம் சுப்பிரமணி யத்திடம்  இருந்துதான் அறிவியல் ஆர்வத்தை கலாம் பெற்றார்.

அப்துல் காலமின் விரும்பிய காலை உணவு ஒரே ஒரு ஆப்பம். ஒரு தம்ளர் பால். வேறு எதையும் சாப்பிட மாட்டார்.

அப்துல் கலாமிடம் ஒரு பழமையான வீணை உண்டு. எப்போதாவது நேரம் கிடைத்தால் அந்த வீணையை வாசிப்பார்.

 அப்துல் கலாமுக்கு மிகுந்த இசை ஞானம் உண்டு. தியாகராஜ கீர்த்தனைகளில் சில கிருதிகளை அவர் தெரிந்து வைத்திருந்தார்.

1998பம் ஆண்டு மே மாதம் 11பைந் தேதி பொக்ரானில் இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தி உலக அரங்கில் தன்னை வல்லரசாக அறிவித்தது. இதற்கு அடித்தளம் அமைத்தவர் அப்துல் கலாம்தான்.

1958ல் மத்திய அரசின் பாதுகாப்புத் துறையில் அப்துல்கலாம் வேலைக்கு சேர்ந்த போது அவருக்கு மாத சம்பளமாக ரூ.250 மட்டுமே.

இந்திய ராணுவத்தில் உள்ள திரிசூல், அக்னி, பிருத்வி, நாக், ஆகாஷ் அகிய ஏவுகணைகள் அப்துல் கலாம் திட்ட இயக்குனராக இருந்த போது வடிவமைக்கப்பட்டது. இது அவரது சாதனை மகுடத்தில் பொருத்தப்பட்ட மற்றொரு வைரமாகும்.

நம் நாட்டுக்கபாக, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை உருவாக்கிய போது அமெரிக்கா உள்பட பல நாடுகள் யார் இந்த கலாம் என ஆச்சரியத்துடனும், மிரட்சியுடனும் பார்த்தன.

போலியோ நோயாளிகளுக்கான எடை குறைந்த ஊன்று கோல் மற்றும் இருதய நோயாளிகளுக்கான எடை குறைந்த ஸ்டெண்ட் கருவி ஆகியவை இவர் கண்டு பிடித்தவையாகும். அந்த ஸ்டெண்டுக்கு ’கலாம் ஸ்டெண்டு’என்றே பெயராகும்.

தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் அப்துல் கலாம் படித்துள்ளார். குறிப்பாக திருக்குறள் அவருக்கு பிடித்தமான நூல்.

கலாம் கவிதை எழுதுவதிலும் ஆர்வம் உள்ளவர். அவர்  எழுதிய ’எனது பயணம்’ என்ற கவிதை நூல் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் கலாம் எப்போதும் சுறுசுறுப்பாக இருந்து வந்தார்.

குடிப்பழக்கம், ஊழல், வரதட்சணை போன்ற 5 தீய பழக்கங்களை கைவிட நாம் ஒவ்வொரு வரும் சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று டெல்லி காந்தி சமாதியில் எழுதி வைக்க அப்துல் கலாம் அறிவுறுத்தி அதை அமல்படுத்தினார்.

இந்திய பாதுகாப்புத்துறையின் ஆய்வுக்கு முதலில் வெளிநாட்டு கருவிகள், பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. அவற்றை நிறுத்தி விட்டு முழுக்க, முழுக்க உள்நாட்டு பொருட்கள் மூலம் ஆய்வு பணிகளை அப்துல் கலாம் செய்ய வைத்தார்.

நன்றி மறுபெயர் கலாம் எனலாம். அந்தளவுக்கு நன்றி மறக்காதவர்.  தனது ஆசிரியர்கள், நண்பர்கள், உதவி செய்தவர்கள் என அனைவரையும் அடிக்கடி நினைவுப்படுத்தி பேசுவார்.

அப்துல் கலாமிடம் நகைச்சுவை உணர்வு அதிகம் உண்டு. நெருக்கடியான சமயங்களில் கூட அவர் நகைக்சுவையை வெளிப்படுத்த தயங்கியதில்லை.

இளைஞர்கள் ஒழுக்கமாகவும், நாட்டுப்பற்றும்  இருக்க வேண்டும் என்று கருதிய கலாம், ’இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இளைஞனுக்கும் கட்டாயம் 2 ஆண்டுகள் ராணுவ பயிற்சி அளிக்க வேண்டும்’ என்றார்.

 கலாம் தினசரி திருக்குரான் படித்து வருவதை தனது வாழ்நாள் குறிக்கோளாக கருதி கடைபடித்து வந்தார்.

குரானில் தனக்கு பிடித்த வரிகள் என்று, ‘றைவா! உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்’ எனும் வரிகளாகும். இந்த வரிகள், என்னுடைய எல்லா சோதனை நாட்களிலும் என்னை கரை சேர்த்த வைர வரிகள் என்று அப்துல் கலாம் குறிப்பிட்டுள்ளார்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 30 பல்கலைக்கழகங்கள் அப்துல்கலாமின் அறிவியல் சாதனைகளை பாராட்டி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்து உள்ளன.

இந்தியாவில் இத்தனை பல்கலைக்கழகங்களில் டாக்டர் பட்டம் பெற்ற விஞ்ஞானி அப்துல் கலாம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், பெல்ஜியம் நாடுகளும் 10-க்கும் மேற்பட்ட விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளன.

 அப்துல் கலாம் ஏராளமான தேசிய விருதுகளையும் பெற்றவர்.

டாக்டர் பைரன்ராய் விண்வெளி விருது, தேசிய வடிவமைப்பு விருது, மத்திய பிரதேச அரசு விருது, ஓம்பிரகாஷ் பாஷின் விருது, 1996-ம் ஆண்டு நாயுடு அம்மாள் நினைவு தங்கப்பதக்க விருது, அறிவியல் தொடர்பான தேசிய அளவிலான ‘மோடி’ விருது, விஞ்ஞான தொழில்நுட்பத் திறனுக்கான தேசிய விருது ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

அப்துல்கலாமின் சேவையை பாராட்டி, மத்திய அரசு 1981-ம் ஆண்டு பத்ம பூஷண் விருதும், 1990-ல் பத்ம விபூஷண் விருதும் வழங்கி கவுரவித்தது.

அதைத் தொடர்ந்து 1997-ம் ஆண்டு இந்தியாவின் மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்பட்டது.