டில்லி

விடுதலை சிறுத்தைகள் கட்சி தங்களுக்கு மோதிரம் சின்னம் ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளது.

 

நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட உள்ளது.

தொகுதி பங்கீடு குறித்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

இந்த கட்சி இரு தொகுதிகளை கேட்டுள்ளதாகவும் அதற்கு திமுக ஒப்புதல் அளிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்த மக்களவை தேர்தலில் தங்களுக்கு மோதிரம் சின்னம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை மனுவை தேர்தல் ஆணையத்துக்கு இக்கட்சி அளித்துள்ளது,