வாரணாசி

வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் வாரணாசி நகரில் ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், அங்குள்ள குளத்தில் சிவலிங்கம் கண்டு பிடிக்கப்பட்டதாகவும், இப்பகுதியில் இந்தியத் தொல்லியல்துறை அறிவியல் பூர்வ கள ஆய்வு செய்ய வேண்டும் எனவும் பல்வேறு இந்து அமைப்புகள் கோரிக்கை எழுப்பின.

அந்த அமைப்புக்கள் இது குறித்து வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. கடந்த 14ஆம் தேதி இந்த வழக்கு விசாரணை முடிவடைந்தது. இந்த வழக்கில் வாரணாசி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீதிமன்றம் மசூதி வளாகத்தில் அறிவியல் பூர்வமாக ஆய்வு நடத்தவும், ஆகஸ்ட் 4 ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்கவும் இந்தியத் தொல்லியல் துறைக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் இருப்பதாகக் கூறப்பட்ட பகுதியை ‘பாதுகாக்கப்பட்ட பகுதி’ என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளதால், அந்த பகுதியைத் தவிர்த்துவிட்டு மற்ற பகுதிகளில் ஆய்வு நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.