சென்னை

வரும் 25 ஆம் தேதி சென்னை சென்டிரலில் இருந்து கோழிக்கோடு வரை வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. 

தெற்கு ரயில்வே கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, சென்னை சென்டிரல் – கோழிக்கோடு இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

வரும் 25 ஆம் தேதி சென்னை சென்டிரலில் இருந்து காலை 4.30 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், பெரம்பூர், காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வருகிற 25-ந்தேதி நாகர்கோவிலில் இருந்து சென்னைக்குச் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.