சென்னை: பொங்கல் விடுமுறைதினம் என்பதால் சுற்றுலா பயணிகளின்  வருகைக்காக இன்று வண்டலூர் பூங்கா உள்பட அரசு சுற்றுலாத்தலங்கள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில்  சுற்றுலாத்தலங்களுக்கு பொதுவாக செவ்வாய்கிழமை விடுமுறை தினமாகும். ஆனால், செவ்வாய்க்கிழமைகளில் பண்டிகை விடுமுறை வந்தால், பொதுமக்கள் வசதிக்காக அன்றைய தினம் சுற்றுலாத்தலங்கள் திறப்பது வழக்கமான நடவடிக்கை. இந்த நிலையில், இன்று மாட்டுப்பொங்கல் தினம் விடுமுறை என்பதால், சுற்றுலா பயணிகளின் வசதிக்காக இன்று அரசு பூங்காக்கள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்து அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வண்டலூரில் அமைந்துள்ளது. வண்டலூர் பூங்காவிற்கு வழக்கமாக செவ்வாய்க்கிழமை விடுமுறை தினம். ஆனால் தற்போது பொங்கல் விடுமுறை காலம் என்பதால், வண்டலூர் பூங்கா திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுஉள்ளது.

சென்னையை புறநகரில் அமைந்துள்ளது வண்டலூர். இங்கு  அண்ணா உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறத. இதில், வெள்ளைப் புலிகள் வங்க புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள், யானைகள், மனித குரங்கு காண்டாமிருகம், நீர்நாய், முதலைகள் என 2 ஆயிரத்திற்கும் அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. இந்த பூங்காவில்  உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் உள்ளது. இதனை தினந்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பார்த்து செல்கின்றனர். இன்றைய தினம் பூங்காவுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிக அளவில் இருக்கும் என்பதால், வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும் என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் வேடந்தாங்கல், கிண்டி சிறுவர் பார்க் உள்பட சுற்றுலா தலங்கள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டு  உள்ளது.