சென்னை:

தேசத்துரோக வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வை.கோ.வுக்கு சிறப்பு நீதி மன்றம் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்ததை எதிர்த்து, வைகோ தொடர்ந்துள்ள மேல்முறையீடு மனு  இன்று பிற்பகல் விசாரணைக்கு வருகிறது.

கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற  புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்ட வைகோ, இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக அவர் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு  ஓராண்டு சிறை தண்டனையும்,  ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.

இதை எதிர்த்து, வைகோ சென்னை உயர்நீதி மன்றத்தில் கடந்த வாரம் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். அதில், தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முழுமையாக நிரூபிக்கப்படாத நிலையில் தண்டனை வழங்கியது தவறு என வைகோ சுட்டிக்காட்டி உள்ளார்.

இந்த மனுமீதான விசாரணை சென்னை உயர்நீதி மன்றத்தில்  இன்று பிற்பகல் நடைபெற உள்ளது.