சென்னை:
கொரோனா 4ம் அலையை தடுக்க தடுப்பூசி அவசியம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு முற்றிலுமாக இல்லாமல் உள்ளது. நீண்ட காலத்திற்கு பிறகு கொரோனா தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது மக்களை நிம்மதியில் ஆழ்த்தியுள்ளது.

ஆனால் அதேசமயம் சீனா, கொரியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. அதனால் மாநிலங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் கொரோனா நான்காம் அலை பரவ வாய்ப்புள்ளதாகவும், கொரோனா 4ம் அலையை தடுக்க தடுப்பூசி அவசியம் என்று அறிவுறுத்தியுள்ளார்.