சென்னை: கிராம ஊராட்சிகளுக்கான உத்தமர் காந்தி விருது – சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் விற்பனைக் கண்காட்சி குறித்து தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே சட்டப்பேரவையில் அறிவித்தப்படி,  கிராம ஊராட்சிகளுக்கான உத்தமர் காந்தி விருது-2022க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதுபோல,  தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் புத்தாண்டு – பொங்கல் விற்பனைக் கண்காட்சி 30.12.2022 முதல் 10.01.2023 வரை நடைபெறுகிறது. இதில் பங்குபெற அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.