நியூயார்க்

ரானுடன் மத்தியஸ்தம் செய்து வளைகுடா நாடுகளுக்கிடையே பதற்றத்தைக் குறைக்க வேண்டும் என டிரம்ப் கேட்டுக் கொண்டதாக இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

தற்போது அமெரிக்காவின் நியூயார்க்கில் 74-வது ஐ.நா. சபை பொதுக்குழுக் கூட்டம் தொடங்கி நடந்து வருகிறது. வரும் 30-ம் தேதி வரை நடக்க உள்ள இந்தக் கூட்டத்தில் அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், தென் கொரியா உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான மோதல் குறித்து ஐ. நா. பொதுக்குழுவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரான் அதிபருடன் ஆலோசிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால் அது குறித்து எவ்வித  திட்டமும்  இல்லை என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்

.நியூயார்க்கில் நடந்த  ஒரு செய்தியாளர் சந்திப்பில் பாகிஸ்தான் பிரதமர்  இம்ரான் கான் “வளைகுடா பகுதியில் பதற்றத்தைத் தணிக்க ஈரானுடன் மத்தியஸ்தம் செய்யுமாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் கேட்டுக் கொண்டார்.    ஆகவே இது தொடர்பாக எங்களால் முயன்றதை நாங்கள் நிச்சயம்  செய்வோம்.

என்னிடம் டிரம்ப் பேசியதைத் தொடர்ந்து நான் ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானியுடன் தொலைபேசியில் பேசினேன்.  அந்த தொலைபேசி பேச்சு தொடர்பாக தற்போது என்னால் விளக்கமாக எதுவும் கூற முடியாது.  அத்துடன் சவுதி இளவரசரும் எண்ணெய் ஆலை தாக்கப்பட்டது தொடர்பாக ஈரான் அதிபருடன் பேசுமாறு என்னைக் கேட்டுக் கொண்டுள்ளார்” என்று தெரிவித்தார்.