வாஷிங்டன்

மெரிக்க பாதுகாப்ப அமைச்சர் லாயிட் ஆஸ்டின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன 

அமெரிக்க செய்தி ஊடகங்களில் அநாட்டின் பாதுகாப்பு அமைச்சர் லியாட் ஆஸ்டின் புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாகத் தகவல் வெளியாகி உள்ளது.  நேற்று வால்டர் ரீட் நேஷனல் மிலிட்டரி மருத்துவம் சென்டர் இது குறித்து ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,

“உடல்ரீதியாக லாயிட் ஆஸ்டின் சில சிக்கல்களைச் சந்தித்துள்ளார். எனவே புத்தாண்டு தினத்தில் இருந்து அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. டிசம்பர் மாத தொடக்கத்தில் லாயிட் ஆஸ்டினுக்குப் புற்றுநோய் கண்டறியப்பட்டது. 

அவர்  டிசம்பர் 22-ம் தேதி அன்று புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்க புரோஸ்டேடெக்டோமி என்று அழைக்கப்படும் “அறுவை சிகிச்சை முறைக்கு” உட்படுத்தப்பட்டார். அப்போது அவருக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டது. ஆஸ்டின் தனது அறுவை சிகிச்சையில் இருந்து குணமடைந்து மறுநாள் காலை வீடு திரும்பினார்.  அவரது உடல்நிலை தற்போது சிறப்பாக உள்ளது” 

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி நிறுவனங்கள்,

”லாயிட் ஆஸ்டின் இந்த செயல்முறையின் போது உண்மையாகவே மயக்க மருந்தின் கீழ் இருந்தாரா என்பது தெளிவாக தெரியவில்லை, ஏனெனில் பென்டகன் இதை முன்னர் வெளிப்படுத்தவில்லை மேலும் அது குறித்து வெள்ளை மாளிகை எச்சரிக்கப்படவில்லை”  

என்று தெரிவித்துள்ளன.