டெல்லி: உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை விரைந்து  மீட்க வேண்டும் என மத்திய அரசுக்கு ராகுல் காந்தி  வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷியா இன்று 3வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், அங்குள்ள இந்தியர்கள், இந்திய மாணவர்கள் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் போர் பதற்றத்துக்கு இடையில், அவர்கள் பதுங்கி உள்ளனர். உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்க மத்தியஅரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது. உக்ரைன் எல்லை நாடுகள்  வழியாக மீட்க முயற்சித்து வருகிறது.
இந்த நிலையில், உக்ரைனில் இந்திய மாணவர்களை விரைந்து மீட்க வேண்டும் என மத்திய அரசுக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி பதிவிட்டுள்ள டிவிட்டில்,  உக்ரைனில் இந்திய மாணவர்கள் பதுங்கு குழிகளில் இருக்கும் காணொலிகள் கவலை அளிப்பதாக உள்ளது. ரஷிய படைகள் கடுமையாக தாக்கும் கிழக்கு உக்ரைனில் பல மாணவர்கள் சிக்கியுள்ளனர்.  எனவே, இந்திய  மாணவர்களை விரைவாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.  அத்துடன்,  உக்ரைனில் பதுங்கு குழிகளில் தங்கியிருக்கும் கர்நாடக மாநில மாணவிகளின் வீடியோவையும் ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார்.