டெல்லி: சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டு உள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சிவில் சர்வீசஸ் தேர்வு அட்டவணை மாற்றப்பட்டது. அந்த புதிய அட்டவணையின்படி, தேர்வானது அக்டோபர் 4ம் தேதி நடத்தப்படுகிறது.

இந் நிலையில், முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்பட்டு உள்ளது. யுபிஎஸ்சியானது தமது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த விவரங்களை வெளியிட்டு உள்ளது.

தேர்வில் பங்கேற்க விண்ணப்பித்தவர்கள் யுபிஎஸ்சி அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஹால் டிக்கெட்டானது தேர்வில் பங்கேற்கும் நாள் வரை இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அதோடு, தேர்வர்கள் என்ன மாதிரியான விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் யுபிஎஸ்சி வெளியிட்டு உள்ளது. சிறிய கையடக்கமான சானிடைசர் பாட்டிலை தேர்வின் போது உடன் எடுத்துச் செல்லலாம்.

கட்டாயம் தேர்வாளர்கள் மாஸ்க் அணிய வேண்டும். அவ்வாறு மாஸ்க் அணியாதவர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். பரீட்சை அரங்குகள், அறைகள் மற்றும் அந்த இடத்தின் வளாகங்களில் சமூக விலகல், தனிப்பட்ட சுகாதாரம் ஆகியவற்றை பின்பற்ற வேண்டும். கொரோன காரணமாக யுபிஎஸ்சி வழிமுறைகளை வெளியிடுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.