டெல்லி:  2022ம் ஆண்டு நடைபெற உள்ள சிவில் சர்வீசஸ் தேர்வு தேதிகளை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

மத்தியஅரசு பணிகளுக்கான தேர்வை ஆண்டுதோறும்மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்தி வருகிறது. அதன்படி, சிவில் சர்வீசஸ், இந்திய வனப்பணி, என்ஜினீயரிங் சேவைகள் பணி உள்பட பல்வேறு பணிகளுக்கான காலி இடங்களுக்கு எழுத்து தேர்வுகள் நடத்தப்படும் விவரங்களை வெளியிட்டு உள்ளது.

நடப்பாண்டு ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுகள் மற்றும்  2022-ம் ஆண்டுக்கான தேர்வு தேதி அட்டவணையை யு.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது.  யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) 2022 ஆம் ஆண்டுக்கான தேர்வு நாட்காட்டியை வெளியிட்டுள்ளது.

அதன்படி,  நடப்பாண்டுக்கான சிவில் சர்வீசஸ் முதன்மைத்தேர்வு அடுத்த ஆண்டு (2022) ஜனவரி மாதம் 7, 8, 9, 15 மற்றும் 16-ந் தேதிகளிலும்,

இந்திய வனப்பணிகளுக்கான முதன்மைத்தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 27-ந் தேதி தொடங்கி, மார்ச் 8-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும்.

சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வுக்கான அறிவிப்பு 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந் தேதி வெளியிடப்படுகிறது.

முதல்நிலைத் தேர்வு ஜூன் மாதம் 5-ந் தேதியும், முதன்மைத் தேர்வு செப்டம்பர் 16-ந் தேதி தொடங்கி 5 நாட்களுக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வனப்பணிகளுக்கான அறிவிப்பு, என்ஜினீயரிங் சேவைப்பணிகள், ஒருங்கிணைந்த புவி அறிவியல் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்கான அறிவிப்பும் அதில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால்,   ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான தேர்வு குறித்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.