அலகாபாத்: உத்திரப்பிரதேசத்தில் ஒரேவாரத்தில் 3 பயங்கரக் கொலைகளை செய்த ‘டிக் டாக்’ வில்லனை இன்னும் பிடிக்க முடியாமல் அம்மாநில போலீசார் திணறி வருகின்றனர்.

அந்தக் கொலையாளி குறித்து துப்புத் தருவோருக்கு ரூ.50000 பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

33 வயதான அஷ்வினி குமார் என்ற அந்த கொலையாளி, தன்னை ஒரு வில்லனாக சித்தரித்து தனது டிக்டாக் வீடியோக்களை இணையத்தில் வெளியிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் பெயரில் இதுவரை எந்தக் குற்ற வழக்குகளும் பதிவாகவில்லை என்றாலும், கடந்த செப்டம்பர் 27ம் தேதி பிஜ்னூரில் பாரதீய ஜனதா தலைவர் ஒருவரின் 25 வயது மகன் மற்றும் அவரின் 26 வயது மருமகன் ஆகிய இருவரையும் சுட்டுக் கொன்றார் மற்றும் துப்பாக்கியுடன் மார்க்கெட் பகுதியில் நுழைந்து தப்பிச் சென்றார்.

பின்னர், தான் முன்னர் விரும்பிய, ஆனால் தன்னை நிராகரித்த நிடிகா ஷர்மா என்ற 27 வயது பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து அவரையும் சுட்டுக்கொன்றார்.
இப்படி அடுத்தடுத்து 3 கொடூரக் கொலைகளை செய்த நபரை இதுவரை கைதுசெய்ய முடியாமல் அம்மாநில போலீசார் தவித்து வருகின்றனர்.