டில்லி:

உ.பி. மாநில  முன்னாள் முதல்வரும்,காங்.மூத்த தலைவருமான என்.டி. திவாரி உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டில்லியில் வசித்து வந்த என்.டி.திவாரி வாதநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, அவருக்கு உயர் ரத்தம் அழுத்தம் ஏற்பட்டது.  அதையடுத்து அவரது உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து, உடடினயாக டில்லியில் உள்ள தனியார்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வும்,  72 மணி நேரம் அபாய கட்டத்தை தாண்டினால்தான் அவரது உடல்நிலை குறித்து தெரிவிக்க முடியும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

தற்போது 92 வயதான என்.டி.திவாரி ஏற்கனவே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்  மூளை பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.