டில்லி

ணவு பதனீடு அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் இன்று ராஜினாமா செய்துள்ளார்.

மத்திய பாஜக அரசு தாக்கல் செய்துள்ள விவசாய மசோதா 2020க்கு கூட்டணிக் கட்சிகள் இடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

சுப்ரமணியன் சாமி இது குறித்து ஏற்கனவே கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசிக்காமல் இந்த மசோதா தாக்கல் செய்தது குறித்து கடும் கண்டனம் எழுப்பி உள்ளார்.

விவசாயிகள் தொடர்பான ஒரு மசோதாவை யாரையும் ஆலோசிக்காமல் தாக்கல் செய்தது தவறு எனச் சுவாமி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பாஜகவின் கூட்டணிக் கட்சித் தலைவரும் மத்திய அமைச்சருமான ஹர்சிம்ரத் கவுர் பாதல் இன்று விவசாய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜினாமா செய்துள்ளார்.

சிரோமணி அகாலி தள கட்சியின் தலைவரான ஹர்சிம்ரத் கவுர் பாதல் உணவு பதனீடுத் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்து வந்தார்.