மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்.

இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராஜ்நாத் சிங் “தனக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும், தன்னுடன் கடந்த சில நாட்களில் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை மேற்கொள்ளவும்” அதில் அறிவுறுத்தியுள்ளார்.

70 வயதாகும் ராஜ்நாத் சிங் கொரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில், வீட்டு தனிமையில் உள்ளார்.