மாக்ரெட்டா:

இத்தாலியில் வெளிநாடுகளை சேர்ந்தவர்களை குறிவைத்து மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாலியின் மாக்ரெட்டா நகரில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வாகனத்தை குறி வைத்து மர்ம ஆசாமி ஒருவன் துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டான். மேலும், அந்த பகுதியில் இருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை நோக்கியும் சுட்டான்.

இதில் 6 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படுகாயமடைந்தனர். இதில் 4 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மர்ம ஆசாமியை போலீசார் விரட்டிப் பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.