நியூயார்க்

ந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளில் 41.5 கோடி மக்கள் வறுமையிலிருந்து  மீண்டுள்ளதாக ஐநா சபை தெரிவித்துள்ளது.

உலகளாவிய பல்பரிமாண வறுமைக் குறியீட்டை ஐ.நா. மேம்பாட்டுத் திட்ட அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 15 ஆண்டுகளில் உலக அளவில் 25 நாடுகள் பல்பரிமாண வறுமையைப் பாதியாகக் குறைத்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வறுமை அளவீடு சுகாதாரம், கல்வி, வாழ்க்கைத் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

ஐ.நா. மேம்பாட்டு திட்ட அமைப்பும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் 2000 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் 81 நாடுகளில் நிகழ்ந்த மாற்றங்களை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டன. அதன்படி கடந்த 15 ஆண்டுகளில் 25 நாடுகள் தங்கள் நாட்டில் நிலவிய பலபரிமாண வறுமையைப் பாதியாகக் குறைத் துள்ளன.

இதில் இந்தியாவில், 2006 முதல் 2021 வரையிலான 15 ஆண்டு காலகட்டத்தில் 41.5 கோடி பேர் பலபரிமாண வறுமையிலிருந்து விடுபட்டுள்ளனர்என கூறப்பட்டுள்ளது.  மேலும் அந்த அறிக்கையில் இது குறிப்பிடத்தக்க அளவிலான மேம்பாடு என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.