புதுடெல்லி:
ரண்டு நாள் பயணமாக போரிஸ் ஜான்சன், இந்தியாவுக்கு நேற்று வந்துள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோரை இன்று சந்தித்து பேச உள்ளார்.

போரிஸ் ஜான்சன் – மோடி இடையேயான சந்திப்பின்போது இருநாட்டுகளுக்கு இடையே வர்த்தகம், பாதுகாப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பயணத்தின் போது உக்ரைன் மீதான போரில் இந்தியா ரஷியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என இங்கிலாந்து பிரதமர் ஜான்சன் இந்திய பிரதமர் மோடியை வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.