சென்னை

மிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம் அவர் மகன் குறித்து கேள்வி எழுப்பி உள்ளார்.

இன்று தி.மு.க. இளைஞர் அணி மாநில, மாவட்ட, மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம் அறிவாலயத்தில் நடந்தது. கூட்டத்திற்கு தி.மு.க இளைஞர் அணி மாநில செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

அமித்ஷா நேற்று ராமேஸ்வரத்துக்கு வந்து என்னைப் பற்றிப் பேசி இருக்கிறார். முதல்வர் மு க ஸ்டாலினுக்கு என்னை முதலமைச்சர் ஆக்குவதுதான் நம்முடைய லட்சியமாம். ஆனால் நான் மக்களைச் சந்தித்துத் தேர்தலில் வெற்றி பெற்று இன்று இந்த பதவிக்கு வந்திருக்கிறேன்.

அமித்ஷாவைக் கேட்கிறேன். தங்கள் மகன் ஜெய்ஷா கிரிக்கெட் சங்கத் தலைவர் ஆகியிருக்கிறாரே, அவர் எத்தனை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினார்? எத்தனை ரன்கள் அடித்தார்? நான் ஏதாவது கேட்டேனா?

கடந்த 2014 இல் ஜெய்ஷா நடத்தி வரும் நிறுவனத்தின் சொத்து மதிப்பு 2014-ல் வெறும் ரூ.74 லட்சம் தான். இப்போது அந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.130 கோடி. இது எப்படி வந்தது? இந்த திடீர் வளர்ச்சி அவருக்கு எப்படி வந்தது?”

என்று வினா எழுப்பி உள்ளார்.