கிருஷ்ணகிரி:
ட்டாசு கடை வெடிவிபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கலையும் நிவாரணமும் அறிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் உள்ள பட்டாசு குடோனில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்து காரணமாக 3 வீடுகள் இடிந்து தரைமட்டாமாகின. 3 வீடுகள் இடிந்து தரைமட்டமான நிலையில் இடிபாடுகளில் மேலும் 5 பேர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

பட்டாசுகள் வெடித்து சிதறியதில் அருகில் உள்ள வீடுகள் சேதமடைந்துள்ளதால் தீயணைக்கும் வீரர்கள் தீயணைக்கும் பணி தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விபத்து நிகழ்ந்த இடத்தில் கிருஷ்ணகிரி ஆட்சியர் சரயு, எஸ்.பி. சரோஜ்குமார் தாகூர், எம்.எல்.ஏ.க்கள் நேரில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

பட்டாசு கடை வெடி விபத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்படி பட்டாசு கடை உரிமையாளர் ரவி அவரது மனைவி ஜெயஸ்ரீ, மகள் ரூத்திகா, மகன் ரூத்திஸ் மற்றும் ஓட்டல் உரிமையாளர் ராஜேஸ்வரி, ஹோட்டல் அருகே வெல்டிங் ஷாப் வைத்திருந்த இம்ரான், இப்ராகிம், தண்ணீர் கேன் கடையில் பணியாற்றிய சரசு மற்றும் ஜேம்ஸ் ஆகிய 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து வெளியான அறிக்கையில், “கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டாசு கடையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி – தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதில், உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சமும், காயமடைந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா 50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஆறுதலையும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 2 லட்சமும், காயம்டைந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 50 ஆயிரமும் நிவாரணமாக அறிவித்துள்ளார்.