கமதாபாத்

கிரிக்கெட் ரசிகர்கள் பாகிஸ்தான் வீரர் முகமது சிஸ்வானுக்கு எதிராக கோஷமிட்டதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

விளையாட்டின் போது பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தார்.  கிரிக்கெட் ரசிகர்கள் சிலர் அப்போது அவரை நோக்கி “ஜெய் ஸ்ரீராம்” எனக் கோஷமிட்டனர்.  இந்த வீடியோ காட்சிகள் இணையத்தின் பரவி வருகின்றன.

தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் இது குறித்து;.

“விருந்தோம்பலுக்குப் புகழ்பெற்ற இந்தியாவில் பாகிஸ்தான் வீரர்களுக்கு எதிரான அணுகுமுறை ஏற்க முடியாது. விளையாட்டு நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைக்கும் சக்தியாக இருக்க வேண்டும். விளையாட்டு என்பது எப்போதும் உண்மையான சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டும். விளையாட்டை வெறுப்பு பரப்பும் கருவியாக பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது.” 

என்று பதிவிட்டுள்ளார்.