டில்லி:

புதுடில்லியில் உள்ள தீஸ் ஹஸாரி நீதிமன்ற வளாகத்தில் இன்று திடீர் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் ஒரவர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. துப்பாக்கி சூட்டுக்கான காரணம் தெரியவில்லை.

டெல்லி தீஸ் ஹஸாரி நீதிமன்ற வளாகத்தில் உள்ள 2-ம் நம்பர் கேட்டுக்கு வெளியில் துப்பாக்குசூடு நடை பெற்றுள்ளது. நீதிமன்ற வழக்கத்தில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் பற்றிய மேலும் தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

துப்பாக்கி சூடு குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். நீதிமன்ற வளாகத்திற்கு வரும் குற்றவாளிகளை தீர்த்துக்கட்ட இந்த துப்பாக்கி சூடு நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.