காசியாபாத்:

.பி. மாநிலம் காசியாபாத் பகுதியில் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது பெண் குழந்தை தெருநாய்களால் கடித்து குதறப்பட்டது. அந்த சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள்.

இது அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம்

காசியாபாத் மாவட்டம் பீம் நகரைச் சேர்ந்த 2 வயது சிறுமி, சிறுவர்களுடன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, அப்பகுதியில் சுற்றித்திரிந்த வெறிநாய்கள் அந்த சிறுமியையும் அவளுடன் விளையாடிய மற்றொரு சிறுவனையும் கடித்து குதறியுள்ளன.

சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ள பொதுமக்கள் ஒடிவந்து, நாய்களை அடித்து விரட்டி சிறுவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில், அதிக பாதிப்புக்குள்ளான சிறுமி சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, தெரு நாய்களைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.