டில்லி:

திமுகவின்  இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்குகளில் தங்கள் கருத்தை கேட்க வேண்டும் என்று அதிமுக சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட்  மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் சார்பாக உச்சநீதி மன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

முடக்கப்பட்ட இரட்டை இலையை, ஒருங்கிணைந்த அதிமுகவுக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், அதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடருவோம் என்று டிடிவி தினகரன் நேற்று சேலத்தில் கூறினார்.

இதன் காரணமாக டிடிவி தரப்பினர் சென்னை ஐகோர்ட்டிலோ அல்லது, சுப்ரீம் கோர்டிலோ வழக்கு தாக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக அதிமுக சார்பில்,தற்போது கட்சியின் ஒருங்கிணைப்பாளராக உள்ள ஓபிஎஸ் சார்பில், உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில்,   தங்களிடம் கேட்காமல் இரட்டை இலை சின்னம் தொடர்பான எந்த வழக்கிலும் புது உத்தரவு பிறப்பிக்க கூடாது என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.