தூத்துக்குடி: திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக ஆட்சியின்போது அமைச்சராகஇருந்த காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்தது தொடர்பான வழக்கில், அமலாக்கத்துறை தங்களையும் இணைத்துக்கொள்ள வேண்டிய மனுத்தாக்கல் செய்தது. இந்த மனுமீது தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது.

 கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் 2001 முதல் 2006 வரை  அமைச்சராக இருந்த தற்போதைய திமுக அரசின்  மீன்வளத்துறை அமைச்சராக இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன்மீது, வருமானத்திற்கு மீறி சொத்து சேர்த்ததாக, கடந்த திமுக ஆட்சி காலத்தில்,  2006 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது.   அதைத்தொடர்ந்து, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2020ல் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கு நிலுவையில் போடப்பட்ட நிலையில், கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி மீண்டும்  விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில், இந்த வழக்கில் எங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கனவே அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த தொடங்கிய நிலையில், அமைச்சரின் 6.5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களையும் முடக்கியது.

இந்த நிலையில், அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு கடந்த 19ஆம் தேதி தூத்துக்குடி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.  அப்போது அமலாக்கத்துறை சார்பில், அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு தொடர்பாக தங்களிடம் முக்கிய ஆவணங்கள் இருப்பதால் வழக்கில் தங்களையும் சேர்க்க கோரி  உத்தரவிட வேண்டும் என்று வாதிடிப்பட்டது.  இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், தீர்ப்பை ஒத்தி வைத்தது.

இதைத்தொடர்ந்து,  அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான அமலாக்கத்துறை முறையீட்டு மனு மீது இன்று உத்தரவு பிறப்பிக்கிறது.