திருச்சி

ன்று திருச்சி மற்றும் கரூர் இடையே பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

தற்போது திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் பல பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.  இதனால் சில ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இன்று திருச்சி கரூர் இடையே பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்க்ப்ப்ட்டுள்ளது.

இவ்வாறு ரயில் சேவை ரத்டு செய்யப்பட்டுள்ளதால் இந்த பகுதி பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.  எனவே இந்த தடத்தில் பேருந்துகளின் எண்ணிக்கையை  அதிகரிக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது.