சென்னை: சுரங்கப் பாதை பணி காரணமாக சென்னை – திருப்பதி ரயில் உட்பட 14 விரைவு ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

ஜோலார்பேட்டை- கே.எஸ்.ஆர் பெங்களூரு மார்க்கத்தில், ஜோலார்பேட்டை – சோம நாயக்கன்பட்டிக்கு இடையே சுரங்கப் பாதை பணி காரணமாக, 14 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.

இதுதொடர்பாக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

சென்னை சென்ட்ரல் – திருப்பதிக்கு செப்.12, 13, 14, 15, 20 21, 23, 25 ஆகிய தேதிகளில் மாலை 4.35 மணிக்கு இயக்கப்படும் ரயில் (16203), திருப்பதி – சென்னை சென்ட்ரலுக்கு செப்.12, 13, 14,15, 21, 22, 24, 25 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் விரைவு ரயில் (16204),

சென்னை சென்ட்ரல் – மைசூருக்கு செப்.12, 13, 14, 20, 21, 23, 24 ஆகிய தேதிகளில் இரவு 9.15 மணிக்கு இயக்கப்படும் காவிரி விரைவு ரயில் (16021), மைசூரு – சென்னை சென்ட்ரலுக்கு செப்.13, 14, 15, 21, 22, 24, 25 ஆகிய தேதிகளில் இரவு 9 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில் (16022) உட்பட 14 ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.

இது தவிர, ஆறு ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளன. சென்னை சென்ட்ரல் – கேஎஸ்ஆர் பெங்களூருவுக்கு செப்.12-ம் தேதி இரவு 10.50 மணிக்கு புறப்பட வேண்டிய விரைவு ரயில் (12657) ஒன்றரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டு செல்லும். இது தவிர, ஆறு ரயில்கள் குறிப்பிட்ட நாட்களில் நேரம் மாற்றி இயக்கப்படவுள்ளன.

 

இவ்வாறு குறிப்பிடப்பட்டு உள்ளது.