சென்னை:

திமுகவை சேர்ந்த கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு இன்று டிடிவி தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்தும், மற்ற எம்எல்ஏக்களுக்கு அழைப்பும் விடுத்துள்ள நிலையில், டிடிவி தரப்பினர் தூக்குகிறார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

இது செய்தியாளர்களிடையே சிரிப்பை வரவழைத்தது.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாருடன், டிடிவியை கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு சந்தித்து பேசியிருப்பது குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அவர், அதுகுறித்து முழு தகவலும் தெரியாது என்ற அவர்,  டிடிவி தரப்பு தூங்குகிறது,  நாங்கள் விழித்து இருக்கிறோம் என்று கூறினார்.

எடப்பாடி அரசு அருதி பெரும்பான்மையுடன் செயல்படுகிறது எனவும், தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகள் பேசி தீர்க்க வேண்டியது என்றார்.

அமைச்சரின் பேச்சு அங்கிருந்தவர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.

ஏற்கனவே டிடிவிக்கு 18 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், மேலும், பல சிலிப்பர் செல்கள் இருப்பதாகவும், சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்போது எடப்பாடிக்கு எதிராக செயல்பட்டு ஆட்சியை கவிழ்ப்பார்கள் என்று டிடிவி தினகரன் அறிவித்து வரும் நிலையில், இன்று மேலும் ஒரு எம்எல்ஏ பகிரங்கமாக சென்று ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், டிடிவி தினகரன் தரப்பு தூங்குகிறது என்று அமைச்சர் கூறியது செய்தியாளர்களிடையே சிரிப்பை வரவழைத்தது.