டில்லி,

ரட்டை இலையை தனது அணிக்கு ஒதுக்க கோரி,  தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்பட்ட புகாரின் அடிப்படையில் கடந்த இரண்டு நாட்களாக டில்லி போலீசார் முன் ஆஜரான  டிடிவி தினகரன்,  3வது நாளாக இன்று மாலை மீண்டும் விசாரணைக்கு ஆஜரானார்.

அதிமுகவின் அதிகாரப்பூர்வமான சின்னமான,  இரட்டை இலை சின்னத்தை தங்களது அணிக்கு ஒதுக்க, சுகேஷ் சந்திரசேகர் என்ற இடைத்தரகர் மூலம் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றதாக டி.டி.வி.தினகரன் மீது டில்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

அதைத்தொடர்ந்து டிடிவியிடம் கடந்த சனிக்கிழமை முதல் விசாரணை  நடைபெற்று வருகிறது. முதல்நாள் சுமார்  8 மணி நேரமும், நேற்று 11 மணி நேரமும் விசாரணை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்றும் விசாரணை தொடர்கிறது. இன்று பிற்பகல் 4 மணி அளவில் டிடிவி தினகரன் டில்லி போலீசார் முன் ஆஜரானார்.

அவரிடம்  உதவி ஆணையர் சஞ்சய் செராவத், துணை ஆணையர் மதுர் வர்மா ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.