சென்னை,

ற்கனவே நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரத்தில் அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் மீதும் சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுக சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஜெ.மறைவை தொடர்ந்து அதிமுக இரண்டாக உடைந்தது. ஓபிஎஸ் தனி அணியாகவும் சசிகலா ஆதரவினர் தனி அணியாகவும் செயல்பட்டனர்.

இதையடுத்து, சசிகலா ஆதரவு எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றார். அதையடுத்து திமுகவின் கோரிக்கையை ஏற்று கவர்னர் எடப்பாடி அரசுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில், தற்போது எடப்பாடி அரசுக்கு எதிராக டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் கவர்ன ரிடம் கடிதம் கொடுத்தது  தொடர்பாக அவர்களை தகுதிநீக்கம் செய்வதாக சபாநாயகர் அறிவித்து உள்ளார்.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 18ந்தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, எடப்பாடி அரசுக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பினர் வாக்களித்தனர். ஆனால், அவர்கள்மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில்,   எனவே கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் ஓ.பி.எஸ் உட்பட 12 பேர் மீது நடவடிக்கை எடுத்து, அவர்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட வேண்டும் என்று திமுக சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிகிறது.