சென்னை

சென்னை, கோவை, விழுப்புரத்திலிருந்து திருப்பதி செல்லும் ரயில் சேவை ஜூலை 2-ஆம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இன்று தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில்,

“திருப்பதி – காட்பாடி இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில் (எண் 07581/ 07660) ஜூலை 2 வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

சென்னை சென்ட்ரல், அரக்கோணத்திலிருந்து திருப்பதி செல்லும் ரயில்கள் (எண் 16057, 06753) ஜூன் 29 முதல் ஜூலை 2 வரை ரேணிகுண்டாவுடன் நிறுத்தப்படும்.

திருப்பதியிலிருந்து சென்னை சென்ட்ரல் வரும் ரயில்கள் (எண் 16054, 06728) ஜூன் 29 முதல் ஜூலை 2 வரை ரேணிகுண்டாவிலிருந்து புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

கோவை – திருப்பதி அதிவிரைவு ரயில் (எண் 22616/22615) ஜூன் 29-ஆம் தேதியும், விழுப்புரம் – திருப்பதி விரைவு ரயில் (எண் 16854/16853) ஜூன் 26 முதல் ஜூலை 2 காட்பாடியுடன் நிறுத்தப்படும்.

அதே தேதிகளில், இந்த ரயில்கள் காட்பாடியிலிருந்து புறப்பட்டு கோவை, விழுப்புரத்துக்கு இயக்கப்படும்”

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.