கடந்த சில வருடங்களாகவே புற்று நோய்க்கு எதிராக சிகிச்சை எடுத்து வந்த ரிஷி கபூர். ஏப்ரல் 30 காலை 8:45 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவர் பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரின் தந்தை ஆவார்.இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கம் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
மரைன் லைன்ஸ் சந்தன்வாடி பகுதியில் இருக்கும் மயானத்தில் அவர் உடல் தகனம் செய்யப்பட்டது..இதில் ரிஷி கபூர் குடும்பத்தினருடன் ஆலியா பட், கரீனா கபூர், சைஃப் அலி கான், ஆதார் ஜெயின், அபிஷேக் பச்சன் உள்ளிட்ட சிலர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் ஆலியா பட் இறுதி சடங்கில் தனது தொலைபேசியைப் பயன்படுத்தியதற்காக நெட்டிசென்கள் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர் .
 

இது ரெகார்ட் செய்வதர்கான நேரமா என்று ஒருவர் கேட்டுள்ளார் .

வெட்கப்பட வேண்டிய ஒரே நபர் நீங்கள் தான் என ஒருவர் கூறியுள்ளார்

சோகமான நிகழ்வில் ஆலியா உங்கள் ஐபோன் x ஐ உங்களுக்குள் வைத்து கொள்ளுங்கள் என ஒருவர் கூறியுள்ளார்
ஆனால் உண்மையில் ஆலியா வீடியோ எடுக்கவில்லை, ரிஷி கபூரின் மகள் ரித்திமா கபூர் சாஹ்னியுடன் வீடியோ காலில் இருந்தார். ஊரடங்கின் காரணமாக, ரித்திமா தனது தந்தையின் கடைசி சடங்குகளில் கலந்து கொள்ள இயலவில்லை.